வண்டிமாடு


கர்த்தனா நான்?
கால்களில் லாடச் சிலுவை
கற்பாதைகளினூடே பயணம்..

சிவனா நான்?
பிடி வைக்கோலுக்காகப்
பாரம் சுமக்கிறேன்.
பிரம்படிகள் மேனியெங்கும்...

கள்ளிப்பால் சுரக்க கற்றிருந்திருக்கலாம்,
எனைப் பெற்றவுடன் கோமாதா...

1 comment:

Anonymous said...

//கள்ளிப்பால் சுரக்க கற்றிருந்திருக்கலாம்,
எனைப் பெற்றவுடன் கோமாதா...//


மனசுக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது!
அன்புடன் அருணா