என்னதான் இருந்தாலும் அந்த கிராமத்து வாழ்க்கைக்கு ஈடாகாது..
அதிகாலை சேவல் சத்தம்.. கோலமிட்ட ஓவியத் தெருக்கள்... சாணம் மெழுகிய சில்லென்ற வீட்டுத்தரைகள்... இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்.... நகரத்தின் நசுக்கலில் அடிக்கடி வந்துபோகும் நினைவுகள்...
இதோ அந்த நினைவுகளின் தாக்கத்தில் உதிர்ந்த கவிதையொன்று..
புழுதி படிந்த கோலிக் குண்டுகள்..
தெருவெலாம் உருண்ட நுங்கு வண்டி...
வளைந்துபோன சைக்கிள் டயர்.
ஆக்கைபட்ட பம்பரங்கள்.
கடந்துவந்த பால்யத்தின் சாட்சிகள்.
காத்துக்கொண்டிருக்கின்றன,
கிராமத்து வீட்டுப் பரணில்..
கான்வென்டில் படிக்கும்
பேரனின் வருகைக்காக...